புதன், 23 ஏப்ரல், 2014

20.04.2014 அன்று திருவள்ளுர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராதவிதமாக ரவிக்குமாரினுடைய சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு அச்சாகி வந்தது. புத்தகம் கையில் கிடைத்த போது திருநின்றவூர் என்ற இடத்தில் பிரச்சாரத்தில் இருந்தார். புத்தகம் வந்த மறுநிமிடமே அதே இடத்தில் புத்தகம் வெளியிடப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.
ரவிக்குமார் அரசியல் கட்சி சார்புடையவராக இருந்தாலும் வேட்பாளராக இருந்தாலும் அவருடைய மனம் எப்போதும் இலக்கியம் சார்ந்தே இயங்குகிறது என்பதற்கு இந்த புத்தக வெளியீடு நல்ல சான்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக