வியாழன், 6 டிசம்பர், 2018

மண்டை ஓடி - ம.நவீன் வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள் - விமர்சனம் இமையம்


வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள் -இமையம்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். .நவீன் எழுதியுள்ளமண்டை ஓடிசிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு என்று கூறுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. தொகுப்பில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. கொள்கைகளை, கோட்பாடுகளை, தத்துவங்களை, முழக்கங்களை முன்னிருத்தி எழுதப்பட்ட கதை என்று ஒன்றையும் சொல்ல முடியாது. எளிய மனிதர்களுடைய வாழ்வில் அன்றாடம் நிகழும் சில கணங்களை இக்கதைகள் காட்சிப்படுத்தியுள்ளன. மனிதர்களுடைய வலியை, காயத்தை, கண்ணீரை, இயலாமையை, மேன்மைகளை, கீழ்மைத்தனங்களை, முழக்கமாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக எழுதப்பட்ட கதைகள்.

கதைகளில் கிராமமும் நகரமும் சம அளவில் இடம் பெறுகின்றன. கிராமம் சார்ந்து, நகரம் சார்ந்து கூடுதல் அபிப்பிராயம் சொல்லப்படவில்லை. எதன்மீதும் புனிதப் பட்டங்கள் ஏற்றப்படவில்லை. கிராமத்திற்கு அதனுடைய இயல்பு அழகு, நகரத்திற்கு அதனுடைய இயல்பு அழகு என்ற அளவில் மட்டுமே கதைகளை ம.நவீன் எழுதியிருக்கிறார். கிராமம், நகரம் மட்டுமல்ல சிறுவர்களு. அதே மாதிரிஇழப்பு’, ‘மணிமங்கலம்’, ‘நெஞ்சிக்கொம்பு’, ‘மண்டை ஓடிஆகிய கதைகள் சிறுவர்களின் வழியாக சொல்லப்படுகிறது. இந்த கதைகளில் கதாசிரியனின் தலையீடு இல்லை. ஒவ்வொம்பெண்களும் கதைகளில் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். ‘நொண்டி’, ‘அவன் இருக்கும் அறை’ – இரண்டு கதைகளையும் தவிர்த்து – மற்ற ஆறு கதைகளில் மிகவும் முக்கியமான பாத்திரமாக இருப்பது நகைச்சுவைதிட்டமிட்டோசெயற்கையாகவோ உருவாக்கப்படவில்லைகதைகளின் போக்கினிலேயே முக்கியமான இழையாக நகைச்சுவை அமைந்திருக்கிறதுஇது இக்கதைகளின் பலங்களில் முக்கியமானதுதமிழ் மொழியில் எழுதப்படும் கதைகளில் காணக்கிடைக்காத அம்சம் இதுரு கதையும் தன்னியல்பில் நிகழ்கிறது. இந்த இயல்புகதைகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
 
இழப்புகதையில் வரக்கூடிய சிறுவனுடைய ஆசை பந்தை உதைத்து விளையாட வேண்டும் என்பது. அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உதை வாங்கி, மூன்றாண்டுகள் கழித்து கடைசியாக பந்தைப் பெறுகிறான். ஆனால் அவனால் பந்தை உதைத்த விளையாட முடியவில்லை. புதிய நவீன நகரத்தை உருவாக்க ஒரு தோட்டத்தை காலி செய்கிறது அரசாங்கம். கிராமத்திலிருந்தவர்களுக்கு நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருகிறது. குடியிருப்பிற்கு முன் மைதானம் இல்லை. பையன் எங்கே விளையாடுவான்? பந்து புதுசாகவே இருக்கிறது. வேறுவழியின்றி சிறுவன் பந்தை நெஞ்சின் மீது உருட்டி விளையாடுகிறான். இறுதியில் பந்தை ஏரியில் உதைத்து தன் ஆசையைத் தீர்ப்பதில் கதை முடிந்துவிடுகிறது. நவீன வாழ்விற்காக பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் எதையெல்லாம் இழந்து எதையெல்லாம் பெற்றிருக்கிறார்கள்? .நவீன் எதையும் சொல்லவில்லை. போகிறபோக்கில் ஒரு காட்சியை வாசகர்களுக்கு காட்டிவிட்டுப்போகிறார். ஒரு நல்ல கதையாசிரியன் செய்யவேண்டியது அவ்வளவுதானே.

இழப்பு கதையில் வருவதுபோலவே மண்டை ஓடிகதையிலும் ஒரு சிறுவன் வருகிறான். கதையின் மையமே அவன்தான். கோடை விடுமுறையில் ஊரைச்சுற்றுகிறான் என்று சிறுவனுடைய தாய் தன்னுடைய தம்பியுடன் அனுப்பிவைக்கிறாள். சிறுவன் போவது உல்லாசப்பயணம் அல்ல. சபா எனும் மாநிலத்தில் இருந்து வந்த தாய்மாமன்  நடத்தும் ஓட்டலில் வேலை செய்வதற்காக. பத்துபேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய ஓட்டல் அது. ஓட்டலில் சமையல்க்காரராக இருக்கக்கூடிய விச்சுதான் ஓட்டலை நிர்வாகம் செய்கிறார். பட்டப்பெயர் வைப்பதில் கை தேர்ந்தவர். பையனுக்கு அவர் வைத்த பெயர் கருப்பட்டி. விச்சு ஓயாமல் பையனை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். அதை ஏன் என்று அவனுடைய மாமா கேட்பதில்லை. விச்சுவின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் இறுதியாண்டு விடுமுறை முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று சிறுவன் தினம் தினம் கணக்குப்போடுகிறான். ஓட்டல் முதலாளியை மட்டுமல்ல, பையனை மட்டுமல்ல, மற்றப்பணியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் விச்சு ஏளனமாகவே நடத்துகிறார். திடீரென்று ஒரு நாள் விச்சு தன்னுடைய ஐந்து மாதச் சம்பளத்தை மொத்தமாக வாங்கி கிட்னி செயலிழந்த காசியின் மனைவியிடம் கொடுத்துவிட்டு ஓட்டலைவிட்டுப் போய்விடுகிறார். காசி மனைவிக்கும் விச்சுவிற்கும் எந்த தொடர்புமில்லை. அறிமுகம் மட்டும்தான். ஓட்டலில் ஒரு பொருளையும் திருடாமல் போய்விடுகிறார். மாமாவின் மூலம் செய்தியை அறிகிற பையன் விச்சுவின் செய்கை அறிந்து பிரமித்துப் போகிறான். அதேநேரத்தில் தன்னுடைய தாய்மாமாவின் சிறுமைத்தனமும் அவனுக்குத் தெரிகிறது. எல்லாருக்கும் பட்டப்பெயர் வைத்து, தூக்கியெறிந்து பேசுகிற, எப்படிப்பட்டவரையும் அலட்சியம் செய்கிற மனம்கொண்ட விச்சு காசியின் மனைவிக்கு எதற்காக பணம் தருகிறார். இதுதான் மனித மனத்தின் விசித்திரம். சபா மாமாவுக்கு விச்சு மண்டை ஓடி. ஆனால், காசியின் மனைவிக்கு சாமி. எப்படி? கதையில் புதிர் அவிழ்க்கப்படுவதில்லை. அதனால்தான் இது கதை.

அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது கதையில் வரக்கூடிய சிறுவன் என்ன செய்வது, என்ன நடக்கிறது என்று திகைத்துப்போய் நிற்பதைப் பார்க்கிறோம். சாதாரணமான பெண்ணாக இருந்த மங்கலம், மணிமங்கலமாக, தெய்வீக அருள்கொண்டவளாக எப்படி மாறுகிறாள், எப்படி பொதுமக்களால் மாற்றப்படுகிறாள் என்பதுதான் கதை. மனித மனங்களைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. மனிதர்களுக்கு உண்மையைவிட பொய்யும் கற்பனையும் தேவையாக இருக்கிறது. உண்மை தராத நம்பிக்கையை பொய்யும், கற்பனை கதையும் தருகிறது. சகமனிதர்கள் மீது கொள்ள முடியாத நம்பிக்கையைசாமி என்ற பெயரில் கல்மீது, மண்மீது, மரத்தின்மீது, கட்டுக்கதைகளின் மீது கொள்ளமுடிகிறது. இதுதான் மனித குலத்தின் விசித்திரம். வாழ்வின் அடித்தளம். இன்றுவரை அறிந்துகொள்ள முடியாத ரகசியம். ஒரு சிறுவனுக்கு தேவை அம்மா. சாமி அல்ல. வணங்கப்படும் பெண்ணல்ல. நிஜத்தில் தன்னுடைய தாய் தெய்வமாக வணங்கப்படுவதைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறான் சிறுவன். கதையின் கடைசியில் தன்னுடைய தாய்க்கு பொதுசனங்களால் போர்த்தப்பட்ட சாமி என்ற கற்பனையை சிறுவனும் நம்ப தொடங்குகிறான். வணங்குகிறான். கணவனும் மனைவியை சாமியாக வணங்குகிறான். கொண்டாடுகிறான்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய அவலம். இழப்பு கதையில் வருகிற, மண்டை ஓடியில் வருகிற, அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது கதையில் வருகிற மூன்று சிறுவர்களும் திகைத்துப்போய்தான் நிற்கிறார்கள். அவர்களால் எதையும் செய்ய முடியாது. அதனால் வேடிக்கை பார்க்கிறார்கள். நிகழும் சம்பவத்தில் ஒரு பகுதியாகிவிடுகிறார்கள். அபத்த வாழ்விற்குள் மனிதர்கள் இப்படித்தான் சமூகத்தாலும், சந்தர்ப்பத்தாலும் சிக்கிக்கொண்டு உழல்கிறார்கள். பிறகு அதுவே வாழ்வின் நியதியாகிவிடுகிறது. அபத்தம் சமூக வாழ்வின் கதையாக, வரலாறாக, கலாச்சாரமாக மாறிவிடுகிறது.

உருத்திரமூர்த்திகூலிகதையில் வரக்கூடிய இளைஞன், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என்று எல்லாராலும் உருப்படாதவன், உதவாக்கரைஎன்று பட்டம் தரப்பட்டவன். ஒவ்வொரு நொடியும் அந்தப்பட்டத்தைத்தான் அவனுக்கான பெயராக குடும்பத்து நபர்கள் உச்சரிக்கிறார்கள். மற்றவர்கள் சொல்கிற மாதிரிதான் அவன் செய்கிற காரியங்களும் நடக்கின்றன. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்திருக்கிற அண்ணனைப் பார்க்கப்போவதில் ஆரம்பித்து, அண்ணனை பார்க்காமலேயே வீட்டிற்குத் திரும்புவதோடு கதை முடிவிற்கு வருகிறது. மருத்துவமனையின் அமைப்பு, அதனுடைய செயல்பாடு, நோயாளிகள், என்பதோடு உருத்திரமூர்த்தியை அவனுடைய குடும்பத்தார்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் கதை. ஊருக்குப்போக இரண்டு ரிங்கிட் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கும்போது முன்பின் அறியாத வயதான நோயாளி ஒருவர் எழுந்து சென்று சிறுநீர்கழிக்க முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்துவிட்டு உறுத்திரமூர்த்தி சென்று கிழவரை தூக்கி உட்கார வைத்து, நடத்தி சென்று, அவருடைய உருப்பைப் பிடித்து சிறுநீர் கழிப்பதற்கு உதவுகிறான். சிறுநீர் பிரிந்ததும் போன உயிர் திரும்பி வந்த மாதிரி நோயாளி நிம்மதி அடைகிறார். பத்து ரிங்கிட்டை கொடுக்கிறார். அதை வாங்காமல் நடந்தே ஊருக்குப்போகிறான் உருத்திரமூர்த்தி. மனிதர்களில் யார் நல்லவர்கள்? இரண்டு ரூபாய் கொடுத்து வீட்டிற்கு அனுப்பாத அப்பா, அம்மா, அக்காவா? சிறு உதவிக்காக பத்து ரூபாய் கொடுத்த நோயாளியா? மனிதர்களை எதைக்கொண்டு அடையாளப்படுத்துவது? அவ்வாறு அடையாளப்படுத்துவது சரிதானா? ஒவ்வொரு இலக்கியப் பிரதியும் இதுபோன்ற கேள்விகளுக்கானப் பதிலை தேடித்தான் எழுதப்படுகின்றன. அதற்கு உருத்திரமூர்த்தி போன்றவர்கள் நம்கண்ணில் அபூர்வமாக தென்படுகிறார்கள். மற்றவர்களால் அசடு என்று சொல்லப்பட்டாலும், மற்ற மனிதர்களை அசடு என்று காட்ட ஒரு கருவியாகவே உருத்திரமூர்த்தி இருக்கிறான். அவன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரமல்ல. பிரசாங்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்டவனல்ல. சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதற்குக் காரணமோ விளக்கமோ சொல்ல முடியாது என்று கதையின் வழியே கதாசிரியர் சொல்கிறார். வாழ்வில் நம்பிக்கைக்கொள்வதற்கு சிறு ஒளி கீற்றுதான் உருத்திரமூர்த்தி போன்றவர்கள்.

மனிதர்கள் மொழியின் வழியாகத்தான் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது முழு உண்மை அல்ல. சிறுசிறு காரியங்கள், பயன்படுத்திய பொருட்கள், வாழ்ந்த இடம், நினைவுகள் என்று பலவற்றின் வழியாகவும் மனிதர்கள் தங்களை ஓயாமல் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். பிணங்கள்கூட நினைவில் வாழவே செய்கின்றன. அப்படித்தான்அவன் வாழும் அறைகதையில் நிகழ்கிறது. வழக்கமான முறையில், வழக்கமான மொழியில் சொல்லப்பட்ட கதை அல்ல. வாடகை அறையில் ஏற்கெனவே இருந்தவன் விட்டு சென்ற அடையாளங்கள் புதிதாக வாடகைக்கு குடியிருக்க வந்தவனை எப்படி துன்புறுத்துகிறது என்பதுதான் கதை. ரசிக்கும்படியாக எழுதப்பட்ட கதை. ஒருமனிதன் மற்றொரு மனிதனுடன் இணைந்து வாழ்வது மட்டுமல்ல நரகம், ஒரு மனிதன் வாழ்ந்த இடத்தில் மற்றொருவன் வாழ நேர்வதும், மற்றவனுடைய அடையாளங்கள், நினைவுகள் உள்ள இடத்தில் வாழ நேர்வதும்கூட நரகம்தான். எல்லாவற்றையும்விட பெரிய நகரம்நினைவுகள். அதுதான்அவன் வாழும் அறையின் கதை. நரகம்பற்றி ஓயாமல் அச்சப்பட்டு பதட்டம் கொள்கிற மனிதர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களும்எப்போதும் நரகத்தைத் தேடிக்கொண்டுதான் அலைகிறார்கள் என்பது எளிய முரண் அல்ல.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளும் காலம்வரும் என்று சொல்கிறதுநொண்டிகதை. ஒரு நொண்டி நாயும், சேது என்ற மனிதனும்தான் கதையின் மையம். சேது அரசியல்வாதியின் கையாள். செல்வாக்கு மிக்கவர். பணமும், வசதியும் இருக்கிறது. வாய் ஜாலாக்கு உள்ளவர். பலருக்கு நன்மை செய்தவர்கூட. இரண்டு பேரினுடைய கைகளை எடுத்துவிடுகிறார். அவ்வளவுதான். அதுதான் அவருடைய வாழ்வில் அவர் செய்த பெரிய கொடூரம். கடைசியில் தான் செய்த நன்மைகளைவிட அந்தச் சம்பவம்தான் அவருக்கு  பெரும் தொந்தரவாக இருக்கிறது. நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம் என்று வந்துவிட்ட நிலையில் தன்னுடைய மொத்த வாழ்வையும் ஆராய்கிறார். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவர் அரசியல்வாதியாக இருந்த காலத்தில் செய்த நன்மைகளே அதிகம். கடைசியாக அவரிடம் எஞ்சி நிற்பது நொண்டி நாய் மட்டும்தான். அதுவும் தெரு நாய். அதுவும் அதனால் முடிந்த அளவிற்கு வித்தைக்காட்டுகிறது. ஆனாலும் அவரைவிட்டு விலகுவதில்லை. வாழ்க்கையில் தோற்றுப்போனவனுக்கு துணையாகவும் ஆதரவாகவும் அந்த நாய் மட்டும்தான் இருக்கிறது. காதலிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அவரால் பயன்படுத்த முடியாது. சேது தன்னுடைய மனதுடன் பேசவில்லை. அந்த நாயுடன்தான் பேசுகிறார். அந்த நாய்தான் சேதுவினுடைய மனசாட்சியாக இருக்கிறது. அவருடைய கடந்தகாலத்தை ஓயாமல் அவருக்கு நினைவுக்குக்கொண்டு வருவது அந்த நாய்தான். அதாவது மனசாட்சி. ஒருபோதும் விட்டுவிலகாத நாய். நினைவுகள் பேசும். மனங்களின் வெறுமையும் பேசும் என்று சொல்கிறது நொண்டி கதை.

தனிமனிதனுடைய கதையின் வழியே சமூகத்தின் கதையை சொல்ல வேண்டும். அதுதான் நிஜமான இலக்கியப் படைப்பு. தனிமனிதனுடைய வாழ்வைவிட ஒரு சமூகத்தின் வாழ்வுதான் முக்கியமானது. சமூக வாழ்வை எழுதுவதுதான் எழுத்தாளனின் வேலை என்பதற்குநெஞ்சுகொம்புகதை நல்ல உதாரணம். இந்த கதையில் மலேசியத் தமிழர்களுடைய வாழ்க்கை சித்திரம் வரையப்படுகிறது. அதற்கு வழியாக கொய்த்தியோ மணியம் இருக்கிறார். தமிழர்களுக்கிடையே இருக்கக்கூடிய பக்தி உணர்வு, அதனுடைய அடையாளமாக இருக்கிற முனியாண்டி சாமி, சாராயம் குடிப்பது, பஞ்சாயத்து, ,நயவஞ்சகமாகப் பெண்களை சீண்டுவது, பெண்டாட்டி ஆக்கிக்கொள்வது, எழவு சொல்கிறவனுடைய வாழ்க்கை என்று இந்த ஒரு கதைக்குள் பலகதைகளை எழுதியிருக்கிறார். இது கைதேர்ந்த கலைஞனுக்கு மட்டுமே வசப்படக்கூடியது. அது ம.நவீனுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. மணியம் பெரிய சண்டியர். அவருடைய மனைவி ஓலம்மாவும் ஒருவகையில் சண்டியர்தான். ரகசியங்கள் நிறைந்தவள். அவள் பெரிய புதிர்நிறைந்த பெண்ணாகவே கடைசிவரை இருக்கிறாள். ஆண் பெண்ணை கணவன் மனைவியாக நீடித்திருக்க வைப்பது குழந்தை. அந்த பாக்கியம் மணியத்திற்கு வாய்த்ததா? ஆனால் அவருடைய மனைவி ஓலம்மாவிற்கு பிள்ளை பிறக்கிறது. எப்படி? அது ரகசியம். அந்த ரகசியம்தான் மணியத்தின் சாவாக இருந்தது. கிண்டலும், கேலியுமாக, வலியுமாக ஒரு சிறுவனுடைய பார்வையிலிருந்து சொல்லப்பட்ட கதை. செட்டி கம்பத்தின் வாழ்க்கை சுருக்கம்நெஞ்சுக்கொம்பு’.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிற சீனப் பெண்ணும், சாராயம் குடிக்க வருகிற தமிழ் ஆண்களும், அவர்களுடைய சேட்டைகளும், கள்ளச்சாராயம் குடிப்பதால் கண்பார்வை மங்கி மயங்கி, பலர் இறந்துபோன மனிதர்களுடைய கதையுமாக விரிவதுஒலி’. மனிதர்கள் திடீர்திடீரென்று இறந்துபோவது தெரியாமல் அரசு விழிக்கிறது. முனியாண்டியின் சாபமாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். மருத்துவ ஆய்வுகள் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறது. ஆனால் மனிதர்கள் இறந்து போவது மட்டும் நிற்கவில்லை. தருமபுரியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 183 பேர் இறந்துபோன சம்பவத்தை ஒலி கதை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலேசியாவிலும் கள்ளச்சாராயம் குடித்து மனிதர்கள் இறந்துபோவார்கள் என்பது கதை அல்ல, நிஜம். தன்னுடைய வாழ்நாள் எல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்த சீனப் பெண் சின்னி பைத்தியமாகிவிடுகிறாள். அவளுடைய குலுக்கலையும், தளுக்கு மொழியையும் ரசிப்பதற்காக சாராயம் குடித்தவர்கள் மாண்டுபோகிறார்கள். முனியாண்டி சாமி எப்போதும் போல இருக்கிறார் மௌனமாக. அவருடைய கை முடமானது அவருக்கு தெரியுமா ?

.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச்சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்றுமண்டை ஓடி’ – தொகுப்பு சொல்கிறது. தமிழ்மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை தொகுப்புகளின் பட்டியலில்மண்டை ஓடியும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் படைப்பு என்பது நிஜ வாழ்க்கையிலிருந்துதான் வரமுடியும். தான் வாழ்ந்ததை, கற்றதை அலங்காரமில்லாமல், ஜோடனைகள் இல்லாமல், வெற்று வார்த்தை சேர்க்கைகள், போதனைகள் இல்லாமல் வாழ்வனுபவமாக கதைகளை திறம்பட, மேம்பட எழுதியிருக்கிறார் ம.நவீன்.

மண்டை ஓடிசிறுகதை தொகுப்பு.நவீன்                                                        கணையாழி
யாவரும் பதிப்பகம்                                                                                                         டிசம்பர் - 2018
214, மூன்றாவது பிரதான சாலை,
புவனேஸ்வரி நகர்,
வேளச்சேரி,
சென்னை - 42

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக